அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு,rajinikanth political news in tamil tamil news india news
tamil seithigal india seithigal tamil cinema news
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு
First Published : Thursday , 29th March 2018 07:33:27 PM Last Updated : Thursday , 29th March 2018 07:33:27 PM
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம், களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் 26 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குமரி, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ரஜினி காந்த் வீடியோ மூலமாக பேசியதாவது:-
இந்த கூட்டம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள்.
நீங்கள் அனைவரும் ஒரு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பார்த்து வியக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
மக்கள் மன்றத்தில் பொறுப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை உரிய நேரத்தில் அது தேடி வரும். அதே நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒற்றுமையுடன் நாம் பணியாற்றினால் நல்லதே நடக்கும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய
எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.
தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது
காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல