2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

பள்ளிக்கரணை அருகே மனைவியுடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் கணவன் காணாமல் போனதால் மனமுடைந்த பெண் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷிர்ஷா(39). மென் பொறியாளரான இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜிகானா (வயது 35). கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 2½ வயதில் பரி என்ற பெண் குழந்தையும், 5 மாதத்தில் ஷரியா என்ற பெண் குழந்தையும் உள்ளது. மென் பொறியாளர் ஷிர்ஷா, ஜிகானா தம்பதிகள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு, வாக்குவாதம் , மோதல்கள் இருந்துள்ளது.
இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் இருவருக்கும் இடையே தோன்றிய மனக்கசப்பு வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் மென் பொறியாளர் ஷிர்ஷா கடந்த ஒரு மாதமாக வீட்டிற்கே வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜிகானா தனது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
கணவரை தொடர்பு கொள்ள ஜிகானா பல முறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர் கணவரை காணாமல் தவித்து வந்துள்ளார். கணவர் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
கணவர் இல்லாத வாழ்க்கை அவருக்கு மன உலைச்சலை தந்துள்ளது, இதனால் வாழ பிடிக்காத அவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.
தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பாலில் விஷத்தை கொடுத்த அவர் குழந்தைகள் உயிரிழந்தவுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
விடிய விடிய வீட்டின் விளக்குகள் எரிவதும் அதிகாலையில் கதவு திறக்காமல் விளக்குகள் எரிந்தபடி இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அக்கம் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஜிகானா தூக்கில் தொங்கியது தெரிந்தது.
உடனடியாக பள்ளிக்கரணை போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஜிகானாவும், கீழே இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையிலும் கிடந்தனர்.
மூவர் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், கணவர் பிரிந்து சென்ற ஏக்கத்தில் ஜிகானா 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றிருப்பதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.
மனைவி குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து கணவர் ஷிரஷாவுக்கு போலீஸார் தகவல் தெரிவிக்க முயன்ற நிலையில் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்
Related :
குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை
கடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...
குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது
பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...
கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...
சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...
அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...
குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...