3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாவந்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர், சஞ்சய் ஷிண்டே. இவர் நேற்று தாவந்தில் உள்ள நகர் மோரி பகுதியில் திடீரென ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில், அந்த நபரை துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால், நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
இதைத்தொடர்ந்து, போரவாகி பகுதிக்கு சென்ற போலீஸ் ஏட்டு சஞ்சய் ஷிண்டே, அங்கு மேலும் இருவரை கண்மூடித்தனமாக சுட்டார். இதனால், அவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில், அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அரங்கேறிய இந்த சம்பவத்தால், பொதுமக்கள் பதை பதைப்பில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த சஞ்சய் ஷிண்டே, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், பலியான 3 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர்களது பெயர் கோபால் ஷிண்டே, பிரசாந்த் பவார் மற்றும் அனில் ஜாதவ் என்பது தெரியவந்தது.
இதனிடையே, வீட்டுக்குள் பதுங்கி இருந்த சஞ்சய் ஷிண்டேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில், கோபால் ஷிண்டே அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த பயங்கர சம்பவத்தை அவர் அரங்கேற்றியதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related :
புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி
பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...
தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து
சமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...
மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...
காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ...
ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு
புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...
தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது
தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...
ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...
15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...